Skip to main content

அது ஒரு வெறுமை!


 அது ஒரு வெறுமை

யாருக்கும் தெரியாத வெறுமை

எவருக்கும் புரியாத வெறுமை

உள்ளுக்குள் உழன்று கொண்டிருக்கும் வெறுமை

வெளியில் பூச்சு பூச்சாக புன்னகை..!


தண்ணீரிலும் தீப்பிடிக்கும்

வெறுமையின் வெப்பம் கூடும்போது...!


கடந்த காலங்களின் வசந்தங்கள்

மெல்ல கழன்று போகும்போது

ஒவ்வொரு உதிர்தலிலும் உணர்வுகளின் பிரளயம்..!


முகவரியாய் மாறிக் கிடக்கும் நகையை

மெல்ல விலக்கிப் பார்த்தால்

மெளனமாக புன்னகைக்கும் கண்ணீர்..!


உருண்டு திரண்டு

தவழ்ந்து போகும் திவலைகள்

மழை நீரின் மதமதப்புக்குள் முடங்கிப் போகும்...!


ஒவ்வொரு வலிக்குள்ளும்

வீரியம் மிகு விசும்பல்கள் அமிழ்ந்திருக்கும்

வலி போக்க வழி பார்த்து

விழியோரம் பெருக காத்திருக்கும்

துளி நீரின் வீழல்கள்

விரல் வந்து தொடும் வரை

காத்திருக்கும்...!


துடிக்கும் இதழ்களுக்குள்

ஒலிக்கும் இதயத்தின் "தடக் தடக்"

இன்னும் வீறு கொள்ள 

வெடித்துக் கிளம்பி வரும் வீராப்பு

தேக்கி வை

தேவைப்படும்.. புன்னகையை வீசி.. புயலைத் துரத்த!

Comments

Popular posts from this blog

எல்லாவற்றுக்கும் தயாராக இருங்கள்.. நெருக்கடி வந்தால்.. மனம் உடைந்து போகாதீர்கள்!

காலையிலேயே வந்த ஒரு மரணச் செய்தி சோர்வைக் கொடுத்து விட்டது. என்னுடன் பணியாற்றிய, எனது சிஷ்யை தீபாவின் திடீர் மரணம் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 45 வயதில் இயற்கை எய்தியிருக்கிறார். 2 பிள்ளைகள்.. அப்பாவும் இல்லை, இதோ அம்மாவும் கிளம்பி விட்டார்.. வருத்தமாக இருக்கிறது. இங்கு எதுவுமே நிரந்தரம் இல்லை. எதற்குமே உத்தரவாதம் இல்லை. எல்லாற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும். செட்டில் ஆகி விட்டோம்.. நமக்கு எல்லாம் இருக்கிறது என்று எப்போதுமே மனதை ரிலாக்ஸ் ஆக்கி விடாதீர்கள்.. எது வேண்டுமானாலும் நடக்கலாம்.. எப்படி வேண்டுமானாலும் மாறலாம். மாற்றத்தை எப்போதுமே எதிர்பார்த்து இருங்கள். எது நடந்தாலும் தைரியத்தை மட்டும் இழக்காதீர்கள்.. பணம், பொருள், பதவி, உறவுகள் என எது போனாலும் கவலைப்படாதீர்கள்.. நெருக்கடியான நேரத்தில் தளர்ந்து போகாமல், நிதானமாக, பொறுமையாக இருக்க முயற்சியுங்கள். அதுதான் நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை. எதுவுமே முடிவு அல்ல.. எதற்குமே யாருமே முற்றுப்புள்ளி வைக்க முடியாது. ஒவ்வொரு புள்ளியையும் கமா-வாக மாற்றிக் கொண்டு நகர முயற்சியுங்கள். நமக்கான வாய்ப்புகள் நிச்சயம் எங்காவது இருக்கும். நாம்...

ஆண்கள் தினம் கொண்டாடும் நிலையிலா இருக்கிறோம்?

சர்வதேச ஆண்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. உண்மையில் அந்த தினத்தைக் கொண்டாடும் தகுதி ஆண்களுக்கு இருக்கிறதா.. அத்தகைய சூழலை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோமா...! சமீப காலமாக அதிகரித்து வரும் பாலியல் பலாத்கார நிகழ்வுகள் அதிர வைக்கின்றன. வயது வித்தியாசம் இல்லாமல் எங்கெங்கும் அதிகரித்துக் கிடக்கும் பாலியல் வன்கொடும் செயல்களைப் பார்க்கும்போது பெண்களை ஆண் சமுதாயம் இன்னும் காமப் பார்வையில்தானே பார்த்துக் கொண்டிருக்கிறது என்று வருந்தத்தான் தோன்றுகிறது. இந்த சூழ்நிலையில் தன்னைப் பிறர் கொண்டாடும் நிலையில் ஆண்கள் சமுதாயம் வைத்துள்ளதாக நான் கருதவில்லை. இதுகுறித்து எனது கருத்து.. இது எனது கருத்து மட்டுமே.. வீடியோவில் பகிர்ந்துள்ளேன். கேட்டு விட்டு சொல்லுங்கள். https://www.youtube.com/watch?v=Q3oaJOs6G_I #InternationalMensDay2021 #ஆண்கள்தினம்