Skip to main content

ஆர்ட்டிகிள் 15.. அப்படியே எடுப்பாங்களா.. இந்தி சூடு குறையாமல்?

இந்தியில் அவ்வப்போது நல்ல சினிமாக்கள் வருகின்றன. கிட்டத்தட்ட மலையாள சினிமாவுக்குப் போட்டியான படங்களை  ஆங்காங்கே பார்க்க முடிகிறது. அப்படிப்பட்ட அபூர்வ படங்களில் ஒன்றுதான் ஆர்ட்டிகிள் 15.

ஆயுஷ்மான் குராணா நடிப்பில் வெளியான ஆர்ட்டிகிள் 15 படமானது, 2 தலித் சிறுமிகளின் கொடூர பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை குறித்த கதை. வட இந்தியாவில் ஜாதித் தீயின் கொடூர நாவுகளில் சிக்கி சின்னாபின்னமாகும் பெண்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் இது.

இந்தப் படத்தைத்தான் தற்போது நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்கிறார்கள். உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார். 

Article 15 என்றால் என்ன.. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 15 என்ன  சொல்கிறது என்றால், ஜாதி, இனம், மொழி, பிறப்பிடத்தின் அடிப்படையில் யாரும், யாருக்கும் இளைத்தவர்கள் அல்ல.. அனைவரும் சமமே...  இந்த கருத்தை அடிப்படையாக வைத்துத்தான் இந்தப் படத்தின் கதையை பின்னியுள்ளனர்.

ஒரு குக்கிராமம்.. ஜாதி வெறியின் உச்சத்தில் உழன்று கிடக்கும் கிராமம். உயர்ந்த ஜாதியினரின் அடிமைகள் போல பட்டியலின மக்கள் நடத்தப்படுகின்றனர். அன்ஷு நெஹரியா என்பவனது நிறுவனத்தில் வேலை பார்க்கும் சிறுமி ஒருவர் 3 ரூபாய் கூலியை உயர்த்திக் கொடுக்குமாறு கேட்க அவரையும், அவரது 2 சகோதரிகளையும் கடத்திச் சென்று கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்கிறான். அதில் இரு சிறுமிகளை கொடூரமாக கொலை செய்து தூக்கில் தொங்க விடுகிறான். இன்னொருவரை காட்டுக்குள் கொண்டு போய் போட்டு விடுகிறான். இந்த  சிறுமிகள் என்பதால் இத்தகைய கொடூரத்தை அரங்கேற்றுகிறான் அன்ஷு.

அந்தக் கிராமத்திற்கு போலீஸ் அதிகாரியாக வரும் அயான் ரஞ்சன், இந்த வழக்கில் தீவிரம் காட்டுகிறார். ஆனால் அவருக்கு ஜாதி வெறியர்கள் மூலமாக பலவிதங்களில் நெருக்கடி வருகிறது. உடன் வேலை பார்க்கும் காவலர்களே, எதுக்கு சார் வீண் பொல்லாப்பு,, நீங்க விசாரிட்டு போய்ருவீங்க.. ஆனால் நாங்க இங்குதான் வாழ்ந்தாக வேண்டும்,  ஆணவக் கொலைன்னு அப்பாவைக் கைது பண்ணிட்டோம். கேஸை முடிச்சுடலாம் என்று ஒத்துழைக்க மறுக்கிறார்கள். ஆனால் அதையெல்லாம் புறம் தள்ளும் ரஞ்சன், காணாமல் போன பூஜாவை கண்டுபிடித்து மீட்கிறார். கடைசியில் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

படம் முழுக்க ஜாதியின் கோர முகத்தை துகிலுரித்திருப்பார்கள். இன்னமும் கூட உ.பி, பீகார் என பல வட மாநிலங்களில் தலைவிரித்தாடும் ஜாதியக் கொடுமைகளை இப்படத்தில் அப்பட்டமாக காட்டியிருப்பார்கள் (இதில் வரும் பல சம்பவங்கள் நம்ம தமிழ்நாட்டிலும் கூட இன்னும் இருக்கத்தான் செய்கிறது). படத்தில் பல ஜாதிகளின் பெயர்களை தைரியமாக பகிரங்கமாக வெளியே கூறிப் பேசியிருப்பார்கள்.. மிகவும் பாராட்டுக்களைக் குவித்த படம் ஆர்ட்டிகிள் 15.

இந்தப் படத்தை எப்படி தமிழில் கொண்டு வரப் போகிறார்கள் என்ற பெரும் கேள்வி எழுகிறது. தமிழ் சினிமா இதுவரை ஜாதியக் கொடுமை குறித்து ஆக்கப்பூர்வமாகவோ, உருப்படியாகவோ அல்லது தைரியமாகவோ எதையும் பேசியதில்லை. ஒன்று பொத்தாம் பொதுவாக எடுப்பார்கள் அல்லது ஏதாவது ஒரு  ஜாதியை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு அதிலேயே வில்லனையும், ஹீரோவையும் உருவாக்கி சேப்டியாக படம் எடுத்துக் கொள்வார்கள். இதுதான் ஜாதி குறித்த நம்ம ஊர் சினிமாக்களின் நிலவரம்.

இப்படிப்பட்ட நிலையில் எல்லா சாதிய வெறியர்களையும் பகிரங்கமாகவே கிழித்துத் தொங்க விட்ட ஆர்ட்டிகிள் 15 படத்தை எப்படி உருவாக்கியிருப்பார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை விட முக்கியமாக யானைக் கட்சி, சைக்கிள் கட்சி, தாமரைக் கட்சி என்று பகிரங்கமாகவே முக்கிய அரசியல் கட்சிகளை கிழித்திருப்பார்கள்.  அந்த துணிச்சலான காட்சிகளை தமிழில் எப்படி வைக்கப் போகிறார்கள் என்பது இன்னொரு எதிர்பார்ப்பு உள்ளது.. நியாயப்படி பார்த்தால் சூரியக் கட்சி, இலைக் கட்சி, பானைக் கட்சி, மாம்பழக் கட்சி என்று  சொல்ல வேண்டும்.. சொல்வார்களா என்று தெரியவில்லை.

உதயநிதி ஸ்டாலின் முன்பு வெறும் நடிகராக இருந்தார். ஆனால் இப்போது ஆளுங்கட்சியின் இளைஞர் அணித் தலைவராக இருக்கிறார், சட்டசபை உறுப்பினராக இருக்கிறார்.. கூடவே மக்கள் செல்வாக்கையும் பெற்றுத் திகழ்கிறார். அப்படிப்பட்டவர் பேசப் போகும் கதை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் கூடவே செய்கிறது. ஆயுஷ்மான் குராணா இந்தப் படத்தில் அவ்வளவு அற்புதமாக நடித்திருப்பார். அதை அப்படியே உதயா செய்தால் கூட போதும் மிகப் பெரிய படமாக இது உருவாகி விடும். இந்தப் படத்தை ஒரிஜினல் கதையை சீர்குலைக்காமல் அப்படியே எடுத்தால், நிச்சயம் உதயநிதிக்கு இது மிகப் பெரிய பிரேக்காகவும் அமையலாம்.

Comments

Popular posts from this blog

எல்லாவற்றுக்கும் தயாராக இருங்கள்.. நெருக்கடி வந்தால்.. மனம் உடைந்து போகாதீர்கள்!

காலையிலேயே வந்த ஒரு மரணச் செய்தி சோர்வைக் கொடுத்து விட்டது. என்னுடன் பணியாற்றிய, எனது சிஷ்யை தீபாவின் திடீர் மரணம் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 45 வயதில் இயற்கை எய்தியிருக்கிறார். 2 பிள்ளைகள்.. அப்பாவும் இல்லை, இதோ அம்மாவும் கிளம்பி விட்டார்.. வருத்தமாக இருக்கிறது. இங்கு எதுவுமே நிரந்தரம் இல்லை. எதற்குமே உத்தரவாதம் இல்லை. எல்லாற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும். செட்டில் ஆகி விட்டோம்.. நமக்கு எல்லாம் இருக்கிறது என்று எப்போதுமே மனதை ரிலாக்ஸ் ஆக்கி விடாதீர்கள்.. எது வேண்டுமானாலும் நடக்கலாம்.. எப்படி வேண்டுமானாலும் மாறலாம். மாற்றத்தை எப்போதுமே எதிர்பார்த்து இருங்கள். எது நடந்தாலும் தைரியத்தை மட்டும் இழக்காதீர்கள்.. பணம், பொருள், பதவி, உறவுகள் என எது போனாலும் கவலைப்படாதீர்கள்.. நெருக்கடியான நேரத்தில் தளர்ந்து போகாமல், நிதானமாக, பொறுமையாக இருக்க முயற்சியுங்கள். அதுதான் நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை. எதுவுமே முடிவு அல்ல.. எதற்குமே யாருமே முற்றுப்புள்ளி வைக்க முடியாது. ஒவ்வொரு புள்ளியையும் கமா-வாக மாற்றிக் கொண்டு நகர முயற்சியுங்கள். நமக்கான வாய்ப்புகள் நிச்சயம் எங்காவது இருக்கும். நாம்...

ஆண்கள் தினம் கொண்டாடும் நிலையிலா இருக்கிறோம்?

சர்வதேச ஆண்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. உண்மையில் அந்த தினத்தைக் கொண்டாடும் தகுதி ஆண்களுக்கு இருக்கிறதா.. அத்தகைய சூழலை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோமா...! சமீப காலமாக அதிகரித்து வரும் பாலியல் பலாத்கார நிகழ்வுகள் அதிர வைக்கின்றன. வயது வித்தியாசம் இல்லாமல் எங்கெங்கும் அதிகரித்துக் கிடக்கும் பாலியல் வன்கொடும் செயல்களைப் பார்க்கும்போது பெண்களை ஆண் சமுதாயம் இன்னும் காமப் பார்வையில்தானே பார்த்துக் கொண்டிருக்கிறது என்று வருந்தத்தான் தோன்றுகிறது. இந்த சூழ்நிலையில் தன்னைப் பிறர் கொண்டாடும் நிலையில் ஆண்கள் சமுதாயம் வைத்துள்ளதாக நான் கருதவில்லை. இதுகுறித்து எனது கருத்து.. இது எனது கருத்து மட்டுமே.. வீடியோவில் பகிர்ந்துள்ளேன். கேட்டு விட்டு சொல்லுங்கள். https://www.youtube.com/watch?v=Q3oaJOs6G_I #InternationalMensDay2021 #ஆண்கள்தினம்