Skip to main content

மழையின் தொடுதல்.. உன் விரல் உரசியபொழுது!




மழையின் தொடுதல்

உன் விரல் உரசியபொழுது


மண்ணைத் தொட்ட அந்த மழை

என் மனதைக் கிளறிய பெரு மழை!


கொட்டும் துளிகளுக்கு மத்தியில்

பத்து விரல்களும் கோர்த்தபடி

பத்திரமாய் பார்த்துப் பார்த்து

தாவித் தாவி நாம் நடந்தபோது

மழையும் நம்மை ரசித்திருக்கும்

நாம் மழையை ரசித்தது போல


தூரத்தில் தெரிந்த வெளிச்சப் புள்ளி

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி

பளீரென வெடித்த மின்னல் சிரிப்புடன்..

கால் நடக்க.. 

தூரம் கடந்தும்.. மழையின் துளிகளில் கலந்து..

மறக்க முடியாத மழைக்காலம்..!


இருவருக்கும் இடையில் பெய்த மழையில்

நனைந்து கிடந்தது நம் காதல்

வான் மழை வரும்பொழுதெல்லாம்..

நினைவுகளும் சடசடவென

மெல்ல மெல்ல.. சொட்டுச் சொட்டாய்...

துளித் துளியாய் பருகியபடி..

ஒவ்வொரு துளியிலும் நம் முகம் பார்த்தபடி!


காதலின் துணைக்கோள்தான் இந்த மழையா?

நம் காதலைச் சுற்றிச் சுற்றி வருகிறதே!

மழை வரும்போதெல்லாம் நீயும் வந்து விழுகிறாய்

மழைத் துளி என் கன்னம் தொடுவதற்குள்

நீ என் உள்ளம் நனைத்து விடுகிறாய்

மின்னலின் வேகத்தில்!


முன்பு போல மழையில் நனைவதில்லை

ஆனாலும் உள்ளுக்குள் பெய்யும் மழையில்

எப்போதும் நனைந்தபடி.. நினைவலைகளில் நீந்தியபடி.. 

கா(கி)தல் கப்பலை ... மிதக்க விட்டபடி!

Comments

Popular posts from this blog

எல்லாவற்றுக்கும் தயாராக இருங்கள்.. நெருக்கடி வந்தால்.. மனம் உடைந்து போகாதீர்கள்!

காலையிலேயே வந்த ஒரு மரணச் செய்தி சோர்வைக் கொடுத்து விட்டது. என்னுடன் பணியாற்றிய, எனது சிஷ்யை தீபாவின் திடீர் மரணம் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 45 வயதில் இயற்கை எய்தியிருக்கிறார். 2 பிள்ளைகள்.. அப்பாவும் இல்லை, இதோ அம்மாவும் கிளம்பி விட்டார்.. வருத்தமாக இருக்கிறது. இங்கு எதுவுமே நிரந்தரம் இல்லை. எதற்குமே உத்தரவாதம் இல்லை. எல்லாற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும். செட்டில் ஆகி விட்டோம்.. நமக்கு எல்லாம் இருக்கிறது என்று எப்போதுமே மனதை ரிலாக்ஸ் ஆக்கி விடாதீர்கள்.. எது வேண்டுமானாலும் நடக்கலாம்.. எப்படி வேண்டுமானாலும் மாறலாம். மாற்றத்தை எப்போதுமே எதிர்பார்த்து இருங்கள். எது நடந்தாலும் தைரியத்தை மட்டும் இழக்காதீர்கள்.. பணம், பொருள், பதவி, உறவுகள் என எது போனாலும் கவலைப்படாதீர்கள்.. நெருக்கடியான நேரத்தில் தளர்ந்து போகாமல், நிதானமாக, பொறுமையாக இருக்க முயற்சியுங்கள். அதுதான் நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை. எதுவுமே முடிவு அல்ல.. எதற்குமே யாருமே முற்றுப்புள்ளி வைக்க முடியாது. ஒவ்வொரு புள்ளியையும் கமா-வாக மாற்றிக் கொண்டு நகர முயற்சியுங்கள். நமக்கான வாய்ப்புகள் நிச்சயம் எங்காவது இருக்கும். நாம்...

ஆண்கள் தினம் கொண்டாடும் நிலையிலா இருக்கிறோம்?

சர்வதேச ஆண்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. உண்மையில் அந்த தினத்தைக் கொண்டாடும் தகுதி ஆண்களுக்கு இருக்கிறதா.. அத்தகைய சூழலை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோமா...! சமீப காலமாக அதிகரித்து வரும் பாலியல் பலாத்கார நிகழ்வுகள் அதிர வைக்கின்றன. வயது வித்தியாசம் இல்லாமல் எங்கெங்கும் அதிகரித்துக் கிடக்கும் பாலியல் வன்கொடும் செயல்களைப் பார்க்கும்போது பெண்களை ஆண் சமுதாயம் இன்னும் காமப் பார்வையில்தானே பார்த்துக் கொண்டிருக்கிறது என்று வருந்தத்தான் தோன்றுகிறது. இந்த சூழ்நிலையில் தன்னைப் பிறர் கொண்டாடும் நிலையில் ஆண்கள் சமுதாயம் வைத்துள்ளதாக நான் கருதவில்லை. இதுகுறித்து எனது கருத்து.. இது எனது கருத்து மட்டுமே.. வீடியோவில் பகிர்ந்துள்ளேன். கேட்டு விட்டு சொல்லுங்கள். https://www.youtube.com/watch?v=Q3oaJOs6G_I #InternationalMensDay2021 #ஆண்கள்தினம்