Skip to main content

தமிழர்களின் சினிமா தாகம் தீர்த்து வைத்த கே டிவி

கே டிவிக்கு 20 வயதாகிறது.. நேற்றுதான் ஆரம்பித்தது போல இருக்கிறது.. அதற்குள் 20 வயதைத் தொட்டுள்ளது. தமிழ்நாட்டு மக்களின் திரை ரசனைக்கு பெரும் தீனி போட்ட பெருமை கே டிவிக்கு நிச்சயம் உண்டு.

தமிழ் திரை ரசிகர்களின் வாழ்க்கையை மாற்றிப் போட்டதிலும் பெரும் பங்குண்டு  கே டிவிக்கு. முன்பெல்லாம் தியேட்டருக்குப் போக வேண்டும் அல்லது கேசட் வாங்கிப் போட்டுப் பார்க்க வேண்டும் என்ற நிலைதான். அதை விட முக்கியமாக தியேட்டருக்குக் குடும்பத்துடன் போக வேண்டும் என்றால், டிக்கெட் செலவு, நொறுக்குத் தீனி செலவு, போக்குவரத்து செலவு என 500 ரூபாயாவது எடுத்து வைத்தாக வேண்டும். 

இந்த இடையூறுகளை எல்லாம் துடைத்துப் போட்டு சினிமா பார்க்கும் அனுபவத்தை மிக மிக இலகுவான ஒன்றாக மாற்றியது கே டிவி. சினிமா பார்ப்பதை சாதாரண விஷயமாக மாற்றிப் போட்டது கேடிவி. இந்த  சானல் வந்த புதிதில் திரையுலகின் கடும் அதிருப்திகளையும் சம்பாதிக்கத் தவறவில்லை. ஆனால் அதையும் கூட சன் குழுமம் லாவகமாக சமாளித்தது.. கடைசியில் திரையுலகின் அன்பையும், ஆதரவையும் பெற்று கேடிவியின் வளர்ச்சி பல படி மேலே உயர்ந்தது.

கே டிவி வந்த பிறகுதான் தொலைக்காட்சிகளில் சினிமா பார்க்கும் அனுபவம் மக்களிடையே அதிகரித்தது. அதேசமயம், தியேட்டர்களுக்கும் கூட்டம் குறையவில்லை. நல்ல படம் வந்தால் நிச்சயம் மக்கள் தியேட்டர்களுக்கு செல்லவே செய்தனர். சினிமா என்பது கஷ்டமான காரியம் அல்ல என்ற புதிய பாதையை ஏற்படுத்தியது கே டிவி. இருந்த இடத்திலேயே அதிக படங்களை பார்க்கும் அனுபவத்தைக் கொடுத்தது கே டிவி.

ஆரம்பத்தில் 3 படம் என்ற ஆரம்பித்து இப்போது 9 படங்கள் வரை வந்து விட்டது கே டிவி. கே டிவியைப் பார்த்து பல தொலைக்காட்சி சானல்கள் அடுத்தடுத்து பிறந்தன. ஆனாலும் யாரும் கே டிவிக்கு அருகில் கூட வர முடியவில்லை. காரணம் சன் டிவி வைத்துள்ள பிரமாண்ட பட அணிவரிசைதான்.

கொரோனா லாக்டவுன் காலத்தில் கே டிவிதான் மக்களின் பொழுதுபோக்குக்கு மிகச் சிறந்த ஊடகமாக இருந்தது. லாக்டவுன் சமயத்தில் மக்களை மகிழ்விக்கும் பணியை கே டிவி திறம்பட செய்தது என்பதில் சந்தேகம் இல்லை. தமிழ் நாட்டு மக்களின் சினிமா பார்க்கும் அனுபவத்தை புதுமையாக மாற்றியமைத்த கே டிவியின் கதை நிச்சயம் தமிழ் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத, தவிர்க்க முடியாத ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை.

கே டிவியின் வெற்றிக்கு அங்கீகாரமாக, அந்த சேனலின் 20வது ஆண்டையொட்டி அதன் சக போட்டி சானலான ஜீ திரை வாழ்த்து சொல்லியுள்ளது.. ஆரோக்கியமான போட்டிதான்.. வரவேற்கலாம், வாழ்த்தலாம்.

Comments

Popular posts from this blog

எல்லாவற்றுக்கும் தயாராக இருங்கள்.. நெருக்கடி வந்தால்.. மனம் உடைந்து போகாதீர்கள்!

காலையிலேயே வந்த ஒரு மரணச் செய்தி சோர்வைக் கொடுத்து விட்டது. என்னுடன் பணியாற்றிய, எனது சிஷ்யை தீபாவின் திடீர் மரணம் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 45 வயதில் இயற்கை எய்தியிருக்கிறார். 2 பிள்ளைகள்.. அப்பாவும் இல்லை, இதோ அம்மாவும் கிளம்பி விட்டார்.. வருத்தமாக இருக்கிறது. இங்கு எதுவுமே நிரந்தரம் இல்லை. எதற்குமே உத்தரவாதம் இல்லை. எல்லாற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும். செட்டில் ஆகி விட்டோம்.. நமக்கு எல்லாம் இருக்கிறது என்று எப்போதுமே மனதை ரிலாக்ஸ் ஆக்கி விடாதீர்கள்.. எது வேண்டுமானாலும் நடக்கலாம்.. எப்படி வேண்டுமானாலும் மாறலாம். மாற்றத்தை எப்போதுமே எதிர்பார்த்து இருங்கள். எது நடந்தாலும் தைரியத்தை மட்டும் இழக்காதீர்கள்.. பணம், பொருள், பதவி, உறவுகள் என எது போனாலும் கவலைப்படாதீர்கள்.. நெருக்கடியான நேரத்தில் தளர்ந்து போகாமல், நிதானமாக, பொறுமையாக இருக்க முயற்சியுங்கள். அதுதான் நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை. எதுவுமே முடிவு அல்ல.. எதற்குமே யாருமே முற்றுப்புள்ளி வைக்க முடியாது. ஒவ்வொரு புள்ளியையும் கமா-வாக மாற்றிக் கொண்டு நகர முயற்சியுங்கள். நமக்கான வாய்ப்புகள் நிச்சயம் எங்காவது இருக்கும். நாம்...

"தைரியம்தான் சார் என்னோட பலமே..".. உலாப் போகும் உணர்வுகள் (15)

ஒரு நீண்ட மருத்துவமனை வாசம். இதுவரை அனுபவித்திராத உணர்வுகள்.. இதுவரை கண்டிராத அனுபவங்கள். ஒரு சாதாரண நபராக இல்லாமல், எனது அனுபவங்களை நான் எல்லோருக்கும் பதிவு செய்ய முக்கியக் காரணம்.. சில விஷயங்களைச் சொல்லத்தான். அரசு மருத்துவமனைகள் மீது பலருக்கும் இன்னும் நம்பிக்கை இல்லை, பயம் இருக்கிறது. ஆனால் அத்தனையையும் பொய் என்று சொல்ல வைத்து விட்டது எனது இந்த மருத்துவமனை அனுபவம். மருந்து வாசனையே இல்லாத அரசு மருத்துவமனையை இப்போதுதான் பார்க்கிறேன். அத்தனை சுத்தம். அருமையான டாக்டர்கள்.. பரிவு காட்டும் செவிலியர்கள்.. தேவையில்லாமல் மருந்துகளைப் போட்டு கஷ்டப்படுத்துவதில்லை. தேவையில்லாமல் எந்த விஷயத்தையும் செய்வதில்லை. எல்லாவற்றிலும் நிதானம், பக்குவம் காட்டுகிறார்கள். . பல விஷயங்களை மனது அசை போட்டுப் பார்க்க இந்த அனுபவம் உதவியது. அனுபவங்கள்தான் நமக்கு ஆசான். அனுபவம் பெறாத மனிதன் என்னைப் பொறுத்தவரை அரை மனிதன்தான். நல்லதோ கெட்டதோ எதையும் உணர்ந்து தெளிந்தால்தான் ஒருவருக்கு முழுமை கிடைக்கும். எந்த அனுபவமாக இருந்தாலும் அதிலிருந்து பாடம் கற்பதும் கற்ற பாடத்திலிருந்து நம்மைத் சரி செய்து கொள்வதும்  மிக முக்...