Skip to main content

வா.. வாத்யாரே!


இந்திய கிரிக்கெட் அணிக்கு சரியான வாத்தியார் கிடைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணிக்கு கோச்சாக இருப்பதற்கெல்லாம் பெரிய பாண்டித்யம் தேவைப்படாது. அதற்குப் பதில், அணியின் சீனியர்களை சரியாக கையாளத் தெரிந்தாலே போதும், அந்த கோச் தனது முழு பதவிக்காலத்தையும் சத்தமில்லாமல் முடித்து விடலாம்.

இதுதான் இன்று வரை உள்ள நிலவரம். ஆனால் இந்திய கிரிக்கெட் அணியின் மென்டார் ஆக மாறியுள்ள மகேந்திர சிங் தோனி மீது ஒரு தனி எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியில் வீரராகவும், விக்கெட் கீப்பராகவும் அறிமுகமாகியபோது ஒரு புயலென கலக்கியவர் அவர். அதன் பின்னர் அவரிடம் கேப்டன் பொறுப்பு வந்த பிறகு அந்த பொறுப்பை யாரும் எதிர்பாராத வகையில் திறமையாக நிர்வகித்தவர்.

அவர் தொட்டதெல்லாம் துலங்கியது, அவர் சொல் பேச்சு கேட்டு நடந்த ஒவ்வொரு வீரரும் அவரவர் திறமையில் உச்சம் தொட்டனர். தட்டிக் கொடுத்து வேலை வாங்குவதிலும், யாருக்கு என்ன திறமை இருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அதன் போக்கில்  அவர்களைக் கொண்டு சென்று சிறந்ததைப் பெறுவதிலும் தோனிக்கு நிகர் தோனிதான்.


இதனால்தான் ஒவ்வொரு கோப்பையையும் தோனி அணி சொல்லி சொல்லி அடித்து வந்தது. இந்த சாதனையை முறியடிப்பதெல்லாம் அசாதாரணமானது. விராட் கோலியால் கூட அது முடியுமா என்பது சந்தேகம்தான். இந்த நிலையில்தான் டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் மென்டார் ஆக உருவெடுத்துள்ளார் தோனி.

தோனி கூட இருந்தாலே 100 யானைகளின் பலம் கிடைத்தது போல. அப்படி இருக்கையில் அவரே மென்டார் ஆக வரும்போது இந்திய அணி வீரர்களுக்கு குறிப்பாக கேப்டன் கோலிக்கும், ஜூனியர் வீரர்களுக்கும் நிச்சயம் மிகப் பெரிய பலம்தான் என்பதில் சந்தேகம் தேவையில்லை. குறிப்பாக இளம் வீரர்களுக்கு தோனி மிகப் பெரிய பூஸ்ட் ஆக அமைவார் என்று நம்பலாம்.

இளம் திறமையை அதிகமாக நம்புபவர், ஊக்குவிப்பவர் தோனி. அவரே ஒரு இளைஞராக பல சாதனைகள் புரிந்தவர்தானே. அந்த அனுபவத்தை அப்படியே இளம் வீரர்களுக்குப் பாய்ச்சி, சீனியர்களுக்கு நிகராக அவர்களையும் விஸ்வரூபம் எடுக்க வைப்பார் தோனி என்ற நம்பிக்கை இப்போதே கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு வந்து விட்டது.

தோனி அதிகம் பேச மாட்டார். வீரர்களின் திறமைகளை சரியாக புரிந்து கொண்டு, நுனுக்கங்களை கற்றுக் கொடுப்பார் அல்லது அவர்களிடம் உள்ள நுனுக்கங்களில் ஏதாவது மாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் அதைச் செய்வார். அவ்வளவுதான்.. யாரிடமும் புதுசாக எதையும் திணிக்க முடியாது. இருக்கும் திறமையைத்தான் சரியாக பயன்படுத்த வேண்டும். இந்த எதார்த்தத்தை சரியாக புரிந்து கொண்டவர்தான் தோனி. எனவே டி20 உலகக் கோப்பைப் போட்டியில் தோனியின் ஆலோசனையின் கீழ் இந்திய அணி பிரமாதமாக ஜொலிக்க வாய்ப்புகள் அதிகம்.

புது வாத்தியாரை வரவேற்போம்.. விரைவில் "ஹெட் மாஸ்டராகவும்" மாறட்டும்!

Comments

Popular posts from this blog

எல்லாவற்றுக்கும் தயாராக இருங்கள்.. நெருக்கடி வந்தால்.. மனம் உடைந்து போகாதீர்கள்!

காலையிலேயே வந்த ஒரு மரணச் செய்தி சோர்வைக் கொடுத்து விட்டது. என்னுடன் பணியாற்றிய, எனது சிஷ்யை தீபாவின் திடீர் மரணம் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 45 வயதில் இயற்கை எய்தியிருக்கிறார். 2 பிள்ளைகள்.. அப்பாவும் இல்லை, இதோ அம்மாவும் கிளம்பி விட்டார்.. வருத்தமாக இருக்கிறது. இங்கு எதுவுமே நிரந்தரம் இல்லை. எதற்குமே உத்தரவாதம் இல்லை. எல்லாற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும். செட்டில் ஆகி விட்டோம்.. நமக்கு எல்லாம் இருக்கிறது என்று எப்போதுமே மனதை ரிலாக்ஸ் ஆக்கி விடாதீர்கள்.. எது வேண்டுமானாலும் நடக்கலாம்.. எப்படி வேண்டுமானாலும் மாறலாம். மாற்றத்தை எப்போதுமே எதிர்பார்த்து இருங்கள். எது நடந்தாலும் தைரியத்தை மட்டும் இழக்காதீர்கள்.. பணம், பொருள், பதவி, உறவுகள் என எது போனாலும் கவலைப்படாதீர்கள்.. நெருக்கடியான நேரத்தில் தளர்ந்து போகாமல், நிதானமாக, பொறுமையாக இருக்க முயற்சியுங்கள். அதுதான் நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை. எதுவுமே முடிவு அல்ல.. எதற்குமே யாருமே முற்றுப்புள்ளி வைக்க முடியாது. ஒவ்வொரு புள்ளியையும் கமா-வாக மாற்றிக் கொண்டு நகர முயற்சியுங்கள். நமக்கான வாய்ப்புகள் நிச்சயம் எங்காவது இருக்கும். நாம்...

"தைரியம்தான் சார் என்னோட பலமே..".. உலாப் போகும் உணர்வுகள் (15)

ஒரு நீண்ட மருத்துவமனை வாசம். இதுவரை அனுபவித்திராத உணர்வுகள்.. இதுவரை கண்டிராத அனுபவங்கள். ஒரு சாதாரண நபராக இல்லாமல், எனது அனுபவங்களை நான் எல்லோருக்கும் பதிவு செய்ய முக்கியக் காரணம்.. சில விஷயங்களைச் சொல்லத்தான். அரசு மருத்துவமனைகள் மீது பலருக்கும் இன்னும் நம்பிக்கை இல்லை, பயம் இருக்கிறது. ஆனால் அத்தனையையும் பொய் என்று சொல்ல வைத்து விட்டது எனது இந்த மருத்துவமனை அனுபவம். மருந்து வாசனையே இல்லாத அரசு மருத்துவமனையை இப்போதுதான் பார்க்கிறேன். அத்தனை சுத்தம். அருமையான டாக்டர்கள்.. பரிவு காட்டும் செவிலியர்கள்.. தேவையில்லாமல் மருந்துகளைப் போட்டு கஷ்டப்படுத்துவதில்லை. தேவையில்லாமல் எந்த விஷயத்தையும் செய்வதில்லை. எல்லாவற்றிலும் நிதானம், பக்குவம் காட்டுகிறார்கள். . பல விஷயங்களை மனது அசை போட்டுப் பார்க்க இந்த அனுபவம் உதவியது. அனுபவங்கள்தான் நமக்கு ஆசான். அனுபவம் பெறாத மனிதன் என்னைப் பொறுத்தவரை அரை மனிதன்தான். நல்லதோ கெட்டதோ எதையும் உணர்ந்து தெளிந்தால்தான் ஒருவருக்கு முழுமை கிடைக்கும். எந்த அனுபவமாக இருந்தாலும் அதிலிருந்து பாடம் கற்பதும் கற்ற பாடத்திலிருந்து நம்மைத் சரி செய்து கொள்வதும்  மிக முக்...