Skip to main content

"நிலா அது வானத்து மேலே".. முதலில் காதல் நவரசம்.. இப்போது பக்திப் பரவசம்..!

இசைஞானி இளையராஜாவின் ஒவ்வொரு பாடல் உருவான விதத்திலும் ஒரு சுவாரஸ்ய கதை புதைந்திருக்கும். அதுகுறித்து அவரது வாயாலேயே நிறைய கேட்டிருக்கிறோம். அவருடன் இருந்தவர்கள் சொல்லியும் பல கதைகள் கேட்டிருக்கிறோம்.

அப்படி ஒரு பாடல்தான் நிலா அது வானத்து மேலே. நாயகன் படத்தில் இடம் பெற்ற ஐக்கானிக் ஐட்டம் சாங் அது. ஆனால் அது முதலில் உருவான விதமே வேறு.

தாலாட்டுப் பாட்டு ஒன்றுக்கு டியூன் கேட்டுள்ளார் மணிரத்தினம். அதற்காக ராஜா போட்ட ட்யூன்தான் நிலா அது வானத்து  மேலே பாடலுக்கான டியூன். ஆனால் அந்த டியூனைக் கேட்ட மணிரத்தினத்திற்கு வேறு யோசனை வந்துள்ளது.. இதை குயிலி ஆடும் ஐட்டம் பாடலுக்கான ட்யூனாக மாற்றி விடலாமா, மாற்றித் தருகிறீர்களா என்று கேட்க, ஒரு நொடி கூட யோசிக்காமல்.. அதற்கென்ன மாத்திட்டா போச்சு என்று அப்படியே டியூனை மாற்றி விட்டார். 

அதன் பிறகு இந்த ட்யூனுக்குப் பதில் தாலாட்டுப் பாடலாக ராஜா போட்டதுதான் தென் பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே பாடல்.

இந்த டியூனை வைத்துத்தான் இப்போது இன்னொரு சுவாரஸ்யத்தைக் கொடுத்துள்ளார் ராஜா. இந்த முறை அது யாரும் எதிர்பாராத ஸ்வீட் சர்ப்பிரைஸும் கூட. கொல்கத்தாவில் நவராத்திரி விழா மிகக் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நவராத்திரியையொட்டி ராஜாவின் டியூனில் ஒரு பாடல் அங்கு வெகு பிரபலமாகியுள்ளது. பெங்காலிகளுக்குத்தான் அந்த டியூன் புதுசு.. ஆனால் நம்மவர்களுக்கு அது ஏற்கனவே மனதில் பதிந்து போன மெமரபிள் டியூன்.

நிலா அது வானத்து பாடல் டியூனைத்தான் அப்படியே பக்தி ரசமாக்கி இந்த நவராத்திரி பாடலை உருவாக்கியுள்ளார் ராஜா. இந்தப் பாடலைப் பாடியிருப்பவர் உஷா உதூப். பெரும் ஹிட்டாகியுள்ள இந்த பெங்காலிப் பாடல் தமிழ் ரசிகர்களுக்கு இனிய ஆச்சரியமாக மாறியுள்ளது. உண்மையிலேயே இந்த பெங்காலி நிலா அது பாடலைக் கேட்கும்போது அத்தனை மலர்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

அதை விட என்ன விசேஷம்னா நிலா அது வானத்து மேலே படத்தில் கப்பல் வரும்.. இதில் படகை செருகி கலக்கியுள்ளனர்.

தாலாட்டுப் பாடலுக்கான டியூனாக உருவாகி.. அது பின்னர் ஐட்டம் சாங்காக மாறி.. இப்போது பக்திப் பரவசமாக மாறி நிற்பது பெரும் ஆச்சரியம்தான். இன்னும் என்னென்ன அவதாரத்தை இந்த ட்யூன் எடுக்கப் போகிறதென்று தெரியவில்லை.. ராஜா ரசிகர்களை குஷிப்படித்தி வரும் அந்த Bhoi Maa Bhoiee என்ற அந்தப் பாடலை நீங்களும் கேட்டுப் பாருங்க.. கருத்துக்களை கமெண்ட்டில் பதிவு பண்ணுங்க.

பாடல்: https://www.youtube.com/watch?v=gGNLG9yJiPk

Comments

Popular posts from this blog

எல்லாவற்றுக்கும் தயாராக இருங்கள்.. நெருக்கடி வந்தால்.. மனம் உடைந்து போகாதீர்கள்!

காலையிலேயே வந்த ஒரு மரணச் செய்தி சோர்வைக் கொடுத்து விட்டது. என்னுடன் பணியாற்றிய, எனது சிஷ்யை தீபாவின் திடீர் மரணம் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 45 வயதில் இயற்கை எய்தியிருக்கிறார். 2 பிள்ளைகள்.. அப்பாவும் இல்லை, இதோ அம்மாவும் கிளம்பி விட்டார்.. வருத்தமாக இருக்கிறது. இங்கு எதுவுமே நிரந்தரம் இல்லை. எதற்குமே உத்தரவாதம் இல்லை. எல்லாற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும். செட்டில் ஆகி விட்டோம்.. நமக்கு எல்லாம் இருக்கிறது என்று எப்போதுமே மனதை ரிலாக்ஸ் ஆக்கி விடாதீர்கள்.. எது வேண்டுமானாலும் நடக்கலாம்.. எப்படி வேண்டுமானாலும் மாறலாம். மாற்றத்தை எப்போதுமே எதிர்பார்த்து இருங்கள். எது நடந்தாலும் தைரியத்தை மட்டும் இழக்காதீர்கள்.. பணம், பொருள், பதவி, உறவுகள் என எது போனாலும் கவலைப்படாதீர்கள்.. நெருக்கடியான நேரத்தில் தளர்ந்து போகாமல், நிதானமாக, பொறுமையாக இருக்க முயற்சியுங்கள். அதுதான் நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை. எதுவுமே முடிவு அல்ல.. எதற்குமே யாருமே முற்றுப்புள்ளி வைக்க முடியாது. ஒவ்வொரு புள்ளியையும் கமா-வாக மாற்றிக் கொண்டு நகர முயற்சியுங்கள். நமக்கான வாய்ப்புகள் நிச்சயம் எங்காவது இருக்கும். நாம்...

"தைரியம்தான் சார் என்னோட பலமே..".. உலாப் போகும் உணர்வுகள் (15)

ஒரு நீண்ட மருத்துவமனை வாசம். இதுவரை அனுபவித்திராத உணர்வுகள்.. இதுவரை கண்டிராத அனுபவங்கள். ஒரு சாதாரண நபராக இல்லாமல், எனது அனுபவங்களை நான் எல்லோருக்கும் பதிவு செய்ய முக்கியக் காரணம்.. சில விஷயங்களைச் சொல்லத்தான். அரசு மருத்துவமனைகள் மீது பலருக்கும் இன்னும் நம்பிக்கை இல்லை, பயம் இருக்கிறது. ஆனால் அத்தனையையும் பொய் என்று சொல்ல வைத்து விட்டது எனது இந்த மருத்துவமனை அனுபவம். மருந்து வாசனையே இல்லாத அரசு மருத்துவமனையை இப்போதுதான் பார்க்கிறேன். அத்தனை சுத்தம். அருமையான டாக்டர்கள்.. பரிவு காட்டும் செவிலியர்கள்.. தேவையில்லாமல் மருந்துகளைப் போட்டு கஷ்டப்படுத்துவதில்லை. தேவையில்லாமல் எந்த விஷயத்தையும் செய்வதில்லை. எல்லாவற்றிலும் நிதானம், பக்குவம் காட்டுகிறார்கள். . பல விஷயங்களை மனது அசை போட்டுப் பார்க்க இந்த அனுபவம் உதவியது. அனுபவங்கள்தான் நமக்கு ஆசான். அனுபவம் பெறாத மனிதன் என்னைப் பொறுத்தவரை அரை மனிதன்தான். நல்லதோ கெட்டதோ எதையும் உணர்ந்து தெளிந்தால்தான் ஒருவருக்கு முழுமை கிடைக்கும். எந்த அனுபவமாக இருந்தாலும் அதிலிருந்து பாடம் கற்பதும் கற்ற பாடத்திலிருந்து நம்மைத் சரி செய்து கொள்வதும்  மிக முக்...